என்று எழுதிய முகூர்த்த விசேஷம், தகவல்களாய் வந்து கொட்டுகின்றன. முடிந்தவரை எனக்கு வந்த அனைத்தையும் எல்லோருக்கும் பயன்படக்கூடும் என்கிற எதிர்பார்ப்பில் இங்கே தொகுக்கிறேன். குறிப்பாக,
மாமல்லன்
விமலாதித்த மாமல்லன்
Tuesday, January 31, 2012
பேராசிரியர் எஸ்.ரா
இடிச்ச புளியாய் எந்த விமர்சனத்திற்கும் பதில் சொல்லாமல் இருக்கும்வரை இவரும் புத்திசாலிதானோ என்று தோன்றும். அதுவும் பளபளக்கும் முன்மண்டை வாய்க்கப்பட்டால் படித்தே முடிகொட்டிப் போனத்ற்கு சாட்சியமாய் அசப்பில் பேரறிஞர் பெர்னார்ட் ஷாவோ என்றுகூடத் தோன்றும். இது போதாதென்று மைக்கையும் பிடித்து சப்ளாக்கட்டையும் இல்லாமல் இலக்கிய உபன்யாசம் வேறு கொடுத்தால் கேட்கவே வேண்டாம் ஆழ நீள அகலத்தில் அசல் இலக்கியவாதி இவர்தான் என்று தோன்றிவிடுவதில் என்ன ஆச்சரியம்.
Saturday, January 28, 2012
காசு - விலிருந்து வந்த காசோலை
மனதுக்குப்பிடித்த சந்தோஷமான காரியமே தொழிலாகவும் அமைவதென்பது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி.
- லால்குடி ஜெயராமன்
Friday, January 27, 2012
பிணவறைக் காப்பாளனின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
ஜெய்பூர் இலக்கிய விழாவில் தூரதூர தேசத்து ராஜாக்களும் ராஜகுமாரிகளும் மார்க் கீப்பர் படித்துவிட்டு ரோஜா மாலை துலிப் மலர்களும் கையுமாக நிற்க, தற்காலிக ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு நீட்டி நீட்டிக் கழுத்திலும் கையிலும் சுளுக்கு பிடித்துக்கொண்டுவிட்டதாம். morgue keeper: digital story January 22nd, 2012
Wednesday, January 25, 2012
எஸ்.ராவுக்கெதிரான அவதூறுக்கெதிராகக் கண்டணம்
இதுவரை 50க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தம் பெயரில் வெளியிட்டிருப்பவர் என்கிற பெருமைக்கு உரியவர் எஸ்.ராமகிருஷ்ணன். அறந்தை நாராயணன் வாரந்தோறும் வயதாகிறது என்று நடிகையைப் பற்றி எழுதியதைப்போல வாரந்தோறும் விருதாகிறது என்பதையே தம் வாழ்நாள் இலக்கிய சாதனையாக வாழ்ந்துகொண்டிருப்பவர். அவரது இலக்கிய சாதனையைப் பாராட்ட ரஜினியும் வைரமுத்துவுமே வாயில்தேடி வருமளவுக்கு மதிப்பு மரியாதையுடன் இலக்கியமாய் வாழும் ஒருவரைப்போய் அவதூறு செய்யலாமா? அப்படி செய்யப்படும் அவதூறை இலக்கிய உலகம் கண்டிக்காமல் விடலாமா? ஊர்பேர் தெரியாத ஒருவர் கிசுகிசு பாணியில் அவதூறு செய்தால் அதை பார்த்துக்கொண்டு எழுத்தாளர்கள் தமிழில் எழுதும் பாவத்திற்காக சும்மா இருக்க வேண்டுமா?
Sunday, January 22, 2012
எண்ணிகையற்ற ஏணிகள்
நடந்துமுடிந்த புத்தகக்கண்காட்சியில் வாங்கியதை விடவும் வேடிக்கை பார்த்ததுதான் அதிகம். நின்றும் அலைந்தும் வேடிக்கை பார்த்ததைவிட உட்கார்ந்து வேடிக்கை பார்த்ததே ஜாஸ்தி. உட்கார விரும்பியதும் உட்கார முடிந்ததுமான ஒரே இடம் தமிழினி. வசந்தகுமாரின் அருகில்தான். அவன் 81லிருந்து நண்பன். எந்த காலத்திலும் வெளிச்சத்திற்கே வரவிரும்பாதவன். அவனது இலக்கிய ரசனைக்கும் எனக்கும் ஒத்தே வராது. பல சமயங்களில் அவனது அபிப்ராயங்கள் முட்டாள்தனமாகக்கூடத் தோன்றும். வாதத்திற்கே வராமல் கட்டைப் பஞ்சாயத்தாக ஒற்றை வார்த்தை ஒரு வரியில் அடித்துவிட்டுப் போய்விடுவான்.
வார்த்தையும் சாரமும்
20.10.10க்கும் 20.01.12க்கும் இடையில உண்மையிலேயே வித்தியாசம் இருக்கிறதா? குறிப்பாக 2010ல் ’உதிர்த்ததால்’ என்பதையும் 2012ல ‘வேலியோர’ என்பதையும் பாருங்கள் எந்த வகையான இலக்கியம் என்பது புரியலாம். சுலபத்தில் புரளுகிற நாவல்ல இது.
Friday, January 20, 2012
விஞ்ச இயலாதவர்களின் குஞ்சுகள்
On Thu, Jan 19, 2012 at 8:30 AM, Arul Victor Suresh <***@gmail.com> wrote:
Thursday, January 19, 2012
எந்துண்டி வஸ்தி?
நகுலன் எழுதிய எல்லாவற்றிலும், இல்லாத அர்த்தங்களை இட்டு நிரப்பி தமக்குத்தாமே இலக்கிய டோப்பா மாட்டிக்கொண்டு இளிக்கும் போலிகளை சுளுக்கெடுக்கும் பிரமிளின் விமர்சனக் கவிதை இது.
Wednesday, January 18, 2012
Sunday, January 15, 2012
கலையின் வேலை
இரண்டு படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒன்று ஏன் கலையாக இருக்கிறது பிரிதொன்று ஏன் ஆகவில்லை என்று விளக்க முற்படுவதைப்போல சிரமமான காரியம் இலக்கியத்தில் வேறு இல்லை.
Thursday, January 12, 2012
ரோசனை
உனக்கென்ன தோணுது
ரூலுக்கு மாறாக ஆபீசர்கள்
லஞ்சத்தை லட்சத்தில் கேட்கலாமோ?
அவர்க்கென்ன தோணுது
அம்பிமாமா சிபிஐக்குப் போயிட்டாக்கா
பிஸினஸுக்குப் பெரியலொள்ளு ஆயிடாதோ?
எனக்கென்ன தோணுது
வருத்தத்துக் காளானார் பலவேஷமென்றால்
ஹசாரே ட்விட்டொண்ணு போட்டாப் போச்சு.
[ஞானக்கூத்தனின் யோசனை கவிதை)
Tuesday, January 10, 2012
அம்பி மாமா சீரீஸ் - பூர்வாங்கம் 101 (1)
அம்பி மாமா என்றதும் யாருக்கேனும் அம்புலி மாமா நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பன்று.
படத்தையும் படிக்கலாம்
Konangal Screening - Francesco Rosi's CHRIST STOPPED AT EBOLI
- WhenSunday, January 15, 2012
- Time5:30pm until 8:30pm
WherePerks Mini Theater, Perks School, Trichy Road ,
Description | Screening starts after 5.45 pm - more info at : http:// |
Monday, January 9, 2012
பழைய ஜாடியும் புதிய முகமூடியும்
கெட்டவார்த்தை பேசறவன் எல்லாம் கெட்டவன் இல்லீங்க # பலபேருக்கு வயித்துல இருக்கற பல்லின் விஷம் வெளியில தெரியாது
Sunday, January 8, 2012
ரோஸ் மில்க் [சிறுகதை]
முகப்பு வளைவை ஒட்டிய இடப்பக்கச் சுவரில் தோட்டாக்கள் சல்லடையாய் துளைத்திருந்த அடையாளங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அப்படியே இருந்தன. பயம் நினைவில் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகவும் வஞ்சம் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் இருதரப்பாலும் வடுக்கள் மறைந்துவிடாதவண்ணம் பதற்றத்துடன் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருந்ததாகத் தோன்றியது.
Saturday, January 7, 2012
வெட்கங்கெட்டப் பூனா
முகநூல் நண்பர் வேண்டுகோளை எப்படி ஏற்க வேண்டும் என்பதுகூடத் தெரியாதவன் உதயா என்கிற எழுத்தாளன்.
Friday, January 6, 2012
புவன்னா போன பூனா
புவன்னா கவிதைப்புகழ் நண்பர் பூனா போயிருக்கிறார்.
நானும் ரவுடிதான் என்று வாலிண்டியராக ஜீப்பில் ஏறி, எல்லாரும் பாத்துக்குங்க நான் ஜெயிலுக்குப் போறேன் ஜெயிலுக்குப்போறேன் என்பதுபோல, பூனா போவதை சொல்லிவிட்டுப் போனதைப் படிக்க நேர்ந்தது.
Thursday, January 5, 2012
படிக்காத மொக்கையும் படித்த மொக்கையும்
ramji Yahoo (Google+) noreply-a8e4858b@plus.google.com 9:32 AM (1 hour ago) to me
படித்த இளைஞன் சனி ஞாயிறில் கவிதை எழுதக்கூடும். அந்தப் ஊத்தைவாய் பான்பராக்காரனோ கவிதையாய் வாழ்ந்துகொண்டிருந்ததாய்ப்பட்டது. அவனுக்கு அந்தப் பொருட்கள் எங்கே போய்க்கொண்டு இருக்கின்றன என்பது கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யோசித்துப்பார்த்தால் தெரிந்திருக்கவேண்டிய அவசியமோ அக்கறையோகூடத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. தன் வேலயில் முழு ஈடுபாட்டுடன் முழு தேர்ச்சியுடன் அவர் ஆழ்ந்திருந்தார். இலக்கியத்திற்கான என் நேரத்தை இன்றைக்கு அளிக்கும் வல்லமை அவரிடமே இருக்கிறது.
Wednesday, January 4, 2012
வேலை
மாலையில் போய் கண்டெய்னருக்கு சீல் வைக்கவேண்டி இருந்தது. தொழிற்சாலை இருக்குமிடம் வேடந்தாங்கலுக்கு எட்டு பத்து கிலோமீட்டருக்கு முன்பாக. செங்கல்பட்டிலிருந்து கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து கிலோமீட்டர் இருக்குமாயிருக்கும். என் வேலை அங்கே இருந்து கண்கணிப்பது. கண்காணிப்பு என்றால் கண்கொத்திப்பாம்பாக அன்று. அங்கே ‘இருந்து’ பரிசோதிக்க வேண்டும். தொழிற்சாலையின் ஊழியர் மூன்று மணிக்கே வந்து ஆவணங்களில் முத்திரைகள் இட்டு அமைதியாய் ஒரு பக்கமாய் அமர்ந்திருந்தார். எப்படியும் நான்கு மணிக்கு மின்வெட்டு உண்டு என்பதால் அதுவரை கொஞ்சம் பொறுங்கள் ஆன்லைன் வேலையை முடித்துக்கொள்கிறேன் என்று அலுவலக வேலையில் மூழ்கினேன்.
Tuesday, January 3, 2012
பிரவாகமான எழுத்து
Tropic of Cancer என்கிற இந்தப் புத்தகம் HENRY MILLER ஆல் 1934ல் எழுதப்பட்டதென்றால் நம்புவீர்களா?
Monday, January 2, 2012
Sunday, January 1, 2012
சாருவுக்கு மோட்சம் சாட்லதான்
பெண்ணாக இருந்தால் சாரு தானாக சாட் செய்து மாட்டிக்கொள்வார். ஆணாக இருந்தால் அடிப்பொடிகளை சாட் செய்யவிட்டு ரெக்கார்ட் ஆகாமல் தப்பிக்கப் பார்ப்பார். அடியிற்கண்ட பொடிசு போன்றதுகள் சாட்டில் வந்து அப்பாவி சாருவை மாட்ட வைத்துவிடும்.
Friday, December 30, 2011
எக்ஸைல்
ஒரு நாவலை எப்படி எழுதவேண்டும் என்று எனக்குத்தெரியாது. தெரிந்திருந்தால் எழுதியிருக்கமாட்டேனா? ஆனால், நாவலை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் அதில் சம்மந்தா சம்மந்தமில்லாமல் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பது சாரு நிவேதிதாவுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் ஆண்டுக்கொன்றாய் எழுதிக்கொண்டே இருக்கிறார் போலும். ஆரம்ப வாசிப்பில், ஆசிரியரின் மேலை வாசிப்பு காரணமாக அதை அப்படியே இறக்கிக் கீழ் வாசிப்பாக எழுதிக்கொண்டு போவதுபோல் தோன்றியது.
Thursday, December 29, 2011
சகிப்பும் தகிப்பும் [சிறுகதை]
திங்கட்கிழமை காலை வழக்கம்போல கிண்டியில்போய் வண்டிபிடிக்க, இரு சக்கர வாகனத்தில் மத்திய கைலாஷ் அருகில் வந்தபோது, அன்றாடம் பார்க்கும் சென்னையா என்று வியக்கும்படி வெண்ணையாக வண்டிகள் சென்று கொண்டிருந்தன. அற்ப சந்தோஷம் ஐஐடி வரைதான் நீடித்தது.
Saturday, December 24, 2011
ஆராய்ச்சியும் அகழ்வாராய்ச்சியும் அல்லது சோத்துக்கு ஊம்பியும் சொகத்துக்கு ஊம்பியும்
<நான் தயாரிப்பில் ஈடுபட்டு பதிப்பித்த நரிக்குறவர் அகராதியும், ஜேனு குருபர் மொழி அகராதியும் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் நிதியுதவி பெற்றவை அல்ல; ஒரு பைசா கூட ஃபோர்டிலிருந்து வந்ததில்லை. நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் இந்த அகராதிகளை யார் வேண்டுமென்றாலும் வாங்கிப்பார்க்கலாம். இந்த அடிப்படை பொது விபரத்தினை அறிந்துகொள்ளாமல் மேற்கண்ட பதிவில் மாமல்லன் என்னை அவதூறு செய்வதன் காரணம் என்ன?>
Wednesday, December 21, 2011
சாமானியர்களின் சாமானும் அறிவுஜீவிகளின் சாமானும்
சாமான் என்று எழுதினால் அறிவுஜீவி அக்ரகாரத்தில் ஆச்சாரம் கெட்டு, பொறுக்கி மொழியாகிவிடும். ஆனால் அயல்நாட்டானின் அம்மண சாமானத்தை அட்டையில் படமாய்க் போட்டுக்கொண்டு, கலாச்சாரம்: அ-கலாச்சாரம்: எதிர்-கலாச்சாரம் என புடுக்கும் கூடசேர்ந்து ஆட அட்டைக்கத்தியைச் சுழற்றுவதுதான் அதிதீவிர அறிவுப் புரட்சி.
Subscribe to:
Posts (Atom)
