சற்றுமுன் , ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த சுட்டியின் வழியாக, ஜெயமோகனின் இணையத்தின் வெறுப்பரசியல் படிக்க நேர்ந்தது.
மாமல்லன்
விமலாதித்த மாமல்லன்
Saturday, May 11, 2013
Tuesday, January 29, 2013
சின்மயி விவகாரம் - மண்குதிரை, வேல்முருகன்
விமலாதித்ய மாமல்லன் ஐயா அவர்களுக்கு,
வணக்கம்!
நான் அபுதாபியில் வசிக்கிறேன். இங்கிருக்கும் இரு நண்பர்களுடன் உரையாடுகையில், (ஆன்லைனில் ஏற்கனவே பெரும்பாலான பதிவுகளை படித்திருந்த போதிலும்) புத்தகத்தை வாங்கி வாசிப்பதில் எங்களுக்கிருக்கும் ஆர்வத்தை உணர்ந்தோம்.
Friday, January 18, 2013
மோர்க்குழம்பும் வடைகறியும்
அளவுக்கு அதிகமாய் தயிர் மீந்துபோனதற்கு மறுநாள் வீடுகளில் மோர்க்குழம்பு வைக்கப்படுவதும் விற்காது தங்கிவிட்ட வடைகள் மறுநாள் கிண்டப்பட்டு வடைகறி ஆகிவிடுவதும் சகஜம்.
Wednesday, January 16, 2013
ஜாலியும் ஸீரியஸும்
அலுவல் நிமித்தமாய் நேற்று மதியம் எண்ணூர் போய்விட்டு மாலையில் திரும்பிக்கொண்டிருக்கையில் சுகுமாரனிடம் இருந்து கைப்பேசி அழைப்பு வந்தது.
Sunday, January 6, 2013
Saturday, January 5, 2013
பின் தொடரும் குற்றவுணர்வுக்குரலின் நிழல்
சின்மயிக்கும் ஜெயமோகனுக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்னவென்றால், இவர்களது கருத்துக்களுக்கு எதிராய் எவ்வளவு ஆணித்தரமான அறிவுபூர்வமான ஆதாரபூர்வமான கருத்துக்கள் தர்க்கபூர்வமாய் முன் வைக்கப்பட்டாலும் அப்படி ஒரு சங்கதி நிகழவே இல்லை என்பது போல வேற்றுலகவாசிகளாய் தாம் சொன்னதையே தேய்ந்த ரெக்கார்டாய் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
Monday, December 31, 2012
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
March 10 2012 saw Mr Mahesh Murthy publish this article
சின்மயி, இவை உங்களது சொற்கள். அப்படியே எடுத்தாள்கிறேன். திரிச்சுட்டார் பிரிச்சுட்டார் என்றெல்லாம் தயவு செய்து சொல்லாதீர்கள்.
Friday, December 28, 2012
செஞ்சு பெத்தாய்ங்களா இல்லே ஆடர் குடுத்து செஞ்சாய்ங்களா?
The Code of Criminal Procedure, 1973 (CrPc) http://www.vakilno1.com/bareacts/CrPc/s207.htm
207. Supply to the accused of copy of police report and other documents.
Thursday, December 27, 2012
அலைபேசியில் வந்த அழைப்பு
பத்மாசினி காட்டிவரும் பயாஸ்கோப் எழுதியபின், பரவலான கவனத்தை ஈர்த்து, தமிழகத்து வயலின் மேதை லால்குடி ஜெயராமன் மற்றும் சின்மயியின் தாயார் மியூஜிகாலஜிஸ்ட்டு பத்மாசினி, இரு தரப்பாருக்கும் நன்மை விளையட்டும் என்கிற நல்லெண்ணத்துடன் அநேகமாக அனைத்து பத்திரிகைகளுக்கும் இதன் சுட்டியை அனுப்பி, மியூஸிக் சீசனாகவும் இருப்பதால், இதைப்பற்றி எழுதுவது, பரபரப்பு செய்தியாய் உங்களுக்கும் பயன்படும், எனவே முடிந்தால் பாருங்கள் என விண்ணப்பித்து இருந்தேன்.
Wednesday, December 26, 2012
புனுகு முகமும் புழுத்த மனமும்
கூகுள் சாட்டில் ஒருவர் வந்து, கீழ்க்காணும் இரண்டு சுட்டிகளையும் கொடுத்துவிட்டு, ”உங்கள் ஆராய்ச்சிக்கு உதவினாலும் உதவும் ;-)” என்றார்.
Tuesday, December 25, 2012
ஒரு சொல்
ட்விட்டர் என்பது என்ன?
அர்த்தநாரி தமிழ் எழுதும் சின்மயிக்கும் அசல் தமிழில் அசால்ட்டாய் எழுதும் ராஜனுக்கும் இடையில் இரண்டு வருடங்களாய் நடந்து கொண்டிருந்த மோதல்கள், போலிப் புகார் காரணமாய் ஜோடனை வழக்காகி வெடிக்கும் முன்னால், இணையவெளிக்கு வெளியிலிருக்கும் தமிழர்களில் பலருக்கும் இப்படி ட்விட்டர் என்கிற ஒன்று இருப்பதே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களது சண்டைக் களத்தின் பெயர்தான் ட்விட்டர்.
அர்த்தநாரி தமிழ் எழுதும் சின்மயிக்கும் அசல் தமிழில் அசால்ட்டாய் எழுதும் ராஜனுக்கும் இடையில் இரண்டு வருடங்களாய் நடந்து கொண்டிருந்த மோதல்கள், போலிப் புகார் காரணமாய் ஜோடனை வழக்காகி வெடிக்கும் முன்னால், இணையவெளிக்கு வெளியிலிருக்கும் தமிழர்களில் பலருக்கும் இப்படி ட்விட்டர் என்கிற ஒன்று இருப்பதே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களது சண்டைக் களத்தின் பெயர்தான் ட்விட்டர்.
Sunday, December 23, 2012
Friday, December 21, 2012
திரிச்சுட்டாரா உரிச்சுட்டாரா
சின்மயி ஸ்ரீபதா அவர்கள் FRIDAY, OCTOBER 26, 2012 Facing abuse and a backlash of rumours என்கிற தலைப்பில் தமது பிளாகில் என்னைப் பற்றி கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
Wednesday, December 19, 2012
பத்மாசினி காட்டிவரும் பயாஸ்கோப்
இலக்கியத்தில் தி.ஜானகிராமன் போல திரை இசையில் எஸ்.பி.பாலசுரமணியம் போல கர்நாடக சங்கீத்தத்தில் லால்குடி ஜெயராமன் அவர்கள் மாபெரும் சாதனையாளர். மடியோடு சாஸ்த்ரீய இசையை அணுகுவோர் மன்னிக்கவும். இணைய இளைஞர்களுக்கு புரியும்படியாக சொல்லவேண்டும் என்பதற்காகக் கூறிய வார்த்தைகளே இவை. சிலருக்கு இது லால்குடியை அவமதிப்பாகக்கூட தோன்றலாம். குறிப்பாக, பணிவின் சிகரமான எஸ்.பி.பி காதுக்கு இது போகாமல் இருக்க வேண்டும். தவறிப் போய்விட்டால் என்கதி அதோகதிதான். யாரைய்யா அவன் மாமல்லன் என்று விசாரித்து, என் கல்லூரித்தோழன்தான் இயக்குநர் வசந்த் என்பதைக் கண்டுபிடித்து, அவனிடம் என் அலைபேசி எண்ணை வாங்கி, லால்குடி எங்கே நான் எங்கே அவரோடு போய் என்னை எப்படி ஒப்பிடப் போயிற்று என்று எஸ்.பி.பி என்னிடம் சண்டைக்கே வந்தாலும் வியப்பில்லை. ஏனென்றால் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் எதிரில் காஞ்சிப் பெரியவர் தன்னைப் பாடச்சொல்லிக் கேட்டதைத் தம் வாழ்நாள் பாக்கியம் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லி மகிழ்பவர் எஸ்.பி.பி.
Sunday, December 16, 2012
சேரியைக் கரிக்கும் சின்மயி
தமது தந்தை காலத்திலேயே, அதாவது அவர்களின் 62 வயதை வைத்துக் கணக்குப்போட்டால் 1950களிலேயே, வேலைக்காரர்களாயிருந்த பள்ளக்குடிகளைப் பார்த்து, அண்ணா அக்கா ஐய்யா என்று மரியாதையுடன் அழைக்கக் கற்றுக்கொடுத்துப் பிள்ளைகளை வளர்த்து, பரமக்குடியிலிருந்த தமது ஐயங்கார் வீட்டில் சகஜமாக பள்ளர்களை வளையவர அனுமதித்த பாரம்பரியம் மிக்க குடும்பம் தமது என்கிறார் தாய். தம் அப்பாவைக் கொண்டு அப்படியே வளர்ந்திருக்கிறாள் தம் மகள். ஆகவே தம் மகள் தலை சிறந்த மனிதாபிமானி என்று சான்றிதழ் வழங்குகிறார். போதாக்குறைக்கு கார் நிறுத்தும் இடத்தில் இருக்கும் கடைநிலைப் பணியாளர்களுக்கும் முதுகை வளைத்துப் பணிவுடன் பணம் கொடுத்து டோக்கன் வாங்கிகொள்ளும் அளவுக்குப் பணிவின் தலைக்காவிரியே சின்மயிதான் என்கிறார் அவரது அம்மா ப்த்மாசினி.
Friday, December 14, 2012
துரோணாச்சாரியார்களும் ஏகலைவன்களும்
சட்டமும் ஆங்கிலமுமாக இருப்பதால் மண்டையைக் குழப்புகிறது. நானோ பயிற்று மொழி தமிழாய்க் கொண்ட அரசுப் பள்ளியில் படித்து, காப்பியடித்தும் ஆங்கிலத்தில் கடைத்தேற இயலாத காரணத்தால் தமிழ் எழுத்தாளனானவன். எனவே நான் புரிந்துகொண்ட அளவில் முன்கதைச் சுருக்கம்.
Wednesday, December 12, 2012
Tuesday, December 11, 2012
சின்மயி விவகாரம் இன்னொரு குரல்
வாசகர் கடிதங்களை எழுதிக்கொள்கிற வழக்கம் எனக்கில்லை. மேலும் வாசகர் கடிதங்கள் எனக்கு வருவதுமில்லை. அப்படியே அபூர்வமாக ஒன்றிரண்டு வந்தாலும் ’ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி பிரசுரத்துக்கு அல்ல’ என்று ஜேம்ஸ் பாண்டின் வீரத்துடன் 36 ஃபாண்டில் தலையிலேயே சொல்லிவிடும். கடிதமும் ஒரு பக்கத்துக்கும் குறைவாகவே வரும்.
ஐன்ஸ்டீன் ஜாடை
ஐன்ஸ்டீன் ஜாடையில் இருந்தால்
போட்டோவில் சிந்தனையாளனாகவும்
தோன்றுமேயென
ஒத்திகை பார்க்க
தலையை
சிலுப்பிக் கொண்டார் எழுத்தாளர்.
போட்டோவில் சிந்தனையாளனாகவும்
தோன்றுமேயென
ஒத்திகை பார்க்க
தலையை
சிலுப்பிக் கொண்டார் எழுத்தாளர்.
Monday, December 10, 2012
சின்மயி விவகாரம் - மறுபக்கத்தின் குரல் கேள்வியும் பதிலும்
|
10:22 AM (10 hours ago)
![]() | ![]() ![]() | ||
| ||||
அன்புள்ள விமலாதித்த மாமல்லன்,
சின்மயி புகார், அது தொடர்ந்த கைதுகள் குறித்த தங்கள் அனைத்து blogகளையும் நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.
Sunday, December 9, 2012
விலாங்குகள் போடப் பார்த்த விலங்கு
மீனுக்குத் தலையும் பாம்புக்கு வாலும் காட்டுவது விலாங்கு என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். இணையத்தில் குறைந்தபட்சம் இவற்றின் எண்ணிக்கை இரண்டு.
Saturday, December 8, 2012
இம்சை அரசி
இணைய குற்றங்களைத் தடுப்பதற்கான சைபர் கிரைம் என்கிற காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டு வந்தபிறகு, தாம் ஏன் புகார் கொடுக்க நேர்ந்தது என்பதற்கான சுய விளக்கமாக, நீல யாணை நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சின்மயி ஸ்ரீபாதா அவர்கள், ஒரு வாரம் கழித்து, தமது வலைத்தளத்தில் தமக்கு விடப்பட்ட கொலை மிரட்டல் குறித்து எழுதியுள்ள பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்கிரீன்ஷாட்டை சிரிக்காது படிக்குமாறு வாசகர்கள் சிறப்பாகக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
Thursday, December 6, 2012
ஆன்மீகமும் வன்மமும்
1942: “My final word of advice to you is educate, agitate, and organize. Have faith in yourself. With justice on our side, I do not see how we can lose our battle. The battle to me is a matter of joy. The battle is in the fullest sense spiritual. There is nothing material or social in it. For ours is a battle not for wealth or for power. It is a battle for freedom. It is a battle for the reclamation of the human personality.”
- B.R.Ambedkar (from a speech made at the All-India Depressed Classes Conference)
Wednesday, December 5, 2012
இவை புத்தகமாய் வந்தால் புழல் விருது கிடைக்குமோ?
Tuesday, November 13, 2012 தீபாவளியன்று ரிலீஸான பிராமணர்களா வாமனர்களா வுக்கு இரண்டே நாட்களில் Thursday, November 15, 2012 அன்றே
Monday, December 3, 2012
கட்டத்துரை என நம்பவைத்த கைப்புள்ளைக்கு
ஷோபா சக்தியின் கப்டன் கதையைப் படித்து அசந்துபோய் ஷோபா சக்தி என்றாலே அடேங்கப்பா என்று நினைத்துவிட்டது என் தவறாகத்தான் இருக்க வேண்டும்.
Saturday, December 1, 2012
Thursday, November 29, 2012
இந்தப் பிரபலங்க பண்ற லொள்ளு தாங்கலப்பா
’மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த’ சின்மயி ஸ்ரீபாதா அவர்களின் தமிழர் நலன் தமிழ்ச்சமூகம் பற்றிய அறிவார்ந்த புரிதல் தமிழாபிமானம் சாதிபேதம் பாராட்டா நல்லியல்பு ஆகிய உயர்குடி குணநலன்கள் பற்றி, பிஎச்டி ஆராய்ச்சி செய்யும் மாணவனின் தீவிரத்தோடு இணையத்தை அலசிக்கொண்டிருக்கையில் வீடியோ சுட்டியைக் கொடுத்திருந்த ட்விடொன்று காணக் கிடைத்தது. சின்ன நடிகர்தானே என்று நினைத்தார் போலும் யாருடைய வீடியோ என்கிற விபரம்கூட கொடுக்கவில்லை.
Tuesday, November 27, 2012
முதுகெலும்பற்ற அறச்சீற்ற அடலேறு
நானுண்டு என் வேலையுண்டு என வேலைக்கும் போய்க்கொண்டு தொழிலாய் இணையத்திலும் எழுதிக்கொண்டு இருப்பவனுக்கு எங்கிருந்தெல்லாம் விருந்து அழைப்பு வருகிறது என்று பாருங்கள்.
ஆடி போயி ஆவணி வந்தா...
நிஜ வாழ்வில் தாம் புரிந்த லீலாவிநோதங்களை அப்படியே உல்டா பண்ணி எக்ஸைலாக உருட்டிக் கொடுத்திருக்கிறார் சாரு என்று காலையில் விவகாரங்களும் விகாரங்களும் என்று எழுதிப் போட்டால், நைஸாக மூக்கை நுழைத்து பாருங்கள் இப்படித்தான் என்னை அப்போதைய சாட்டிலும் மாட்டிவிட்டார்கள் என்று ஒரு குப்பையை, ஸ்பாமைக் காட்டி நிஜத்தில் தாம் நடந்துகொண்ட கீழ்மையிலிருந்து திரும்பவும் எப்படித் தப்பிக்கப் பார்க்கிறார் சாரு நிவேதிதா என்கிற கைப்புள்ளை.
Subscribe to:
Posts (Atom)
